திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 264மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் அனைத்து மாணவர்களும் +2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், பெண் கல்விக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வரும் நிலையில் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் திமுக கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா.மோகன்ராஜ், மீஞ்சூர் காங்கிரஸ் நகர தலைவர் அரவிந்த், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் மணவாளன், சகாய மாதா பள்ளியின் தாளாளர் அற்புத தெரசா தலைமை ஆசிரியர் செல்வராணி டி.வி.எஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி வேதியல் ஆசிரியர் அன்பு மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு