• About
  • Contact
Wednesday, June 4, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

திருக்கோயில் தேரோட்டம்

admin2 by admin2
June 21, 2024
in Latest News, Sivaganga
0
திருக்கோயில் தேரோட்டம்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை  வட்டம், கண்டதேவி கிராமத்தில், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தேவஸ்தானம் மற்றும் பொதுமக்கள் இணைந்து                  இன்றைய தினம் (21.06.2024) நடத்திய  அருள்மிகு ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர்  திருக்கோயில் தேரோட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் திரு.ஜெயராமன், இ.கா.ப, அவர்கள், தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர். கண்ணன், இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் (சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்) திரு.துரை,இ.கா.ப.,  அவர்கள்  மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்      திரு. பிரவீன் உமேஷ் டோங்கரே, இ.கா.ப., அவர்கள், சிவகங்கை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு  ராணி. மதுராந்தகி நாச்சியார் அவர்கள்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள், சிவகங்கை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.என்.பழனிக்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல்துறையை சார்ந்தோர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டதேவி அருள்மிகு ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலானது இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் திருக்கோயிலாகும்.  இத்திருக்கோயிலானது தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி நாடுகள் எனும் பகுதிகளுக்கு கீழ் உள்ள கிராம மக்களுக்கான தலைமை கோயில் ஆகும். சிவகங்கை தேவஸ்தானம் நிர்வாகத்தில் உள்ள கண்டதேவி அருள்மிகு குங்குமகாளியம்மன் திருக்கோயில் உற்சவத்தினை தொடர்ந்து, இத்திருக்கோயில் உற்சவமானது ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் பத்து நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில், எவ்வித பாகுபாடின்றி தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டு திருவிழா  சிறப்பாக நடைபெறும். 

இத்திருக்கோயில் திருத்தேரோட்டமானது 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக திருத்தேரோட்டமானது நடைபெறவில்லை. 2002, 2004, 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைப்புக் கூட்டமானது நடத்தப்பட்டு திருத்தேரோட்டமானது நடைபெற்றது. 2003-ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே சுமூக உறவு ஏற்படாததால் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திருப்பணி மேற்கொள்ளப்பட்டதால் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. (05.02.2012) அன்று குடமுழுக்கு நடைபெற்றது.

அரசாணையின்படி, ஆய்வுக்குழுவினர் பழைய திருத்தேரினை பார்வையிட்டு குழு அறிக்கையின்படி (22.04.2015) அன்று பழைய தேரானது பிரிக்கப்பட்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் பணியானது மேற்கொள்ளப்பட்டு, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தேர்பணியானது முடிவுற்றது (திருத்தேர் உயரம் 13 அடி 3 அங்குலம் சிம்மாசனம் வரை அகலம் 13 அடி 3 அங்குலம், எடை 26 டன்கள்). தேரோடும் வீதிசுமார் 3 கி.மீ ஆகும். 2019-ஆம் ஆண்டில் நான்கு நாட்டார்கள் சேர்ந்து திருத்தேர் வெள்ளோட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அவ்வருடம் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக திருத்தேர் வெள்ளோட்டமானது நடைபெறவில்லை. (17.06.2022) அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சுமூக உறவு எட்டப்படாததால் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. அதன்பின்பு,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, ஒருங்கிணைப்புக் கூட்டமானது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (09.11.2023) அன்று அனைத்து தரப்பினர்களைக் கொண்டு நடத்தப்பட்டு (11.02.2024) அன்று திருத்தேர் வெள்ளோட்டமானது நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து, இவ்வருடம் ஆனி திருவிழாவானது (13.06.2024) அன்று துவங்கி (22.06.2024) அன்று நிறைவடைகிறது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது இன்று (21.06.2024) காலை 6.40 மணிக்கு  சிறப்பாக துவங்கப்பட்டு, 8.00 மணியளவில் நிறைவடைந்தது. 2006-ஆம் ஆண்டிற்கு பின்பு 17 வருடங்கள் கடந்து திருத்தேரோட்டமானது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின்படி, இனிதே நடைபெற்றுள்ளது. இத்திருத்தேரோட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொண்டு,  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மாண்புமை உயர்நீதிமன்ற ரிட் மனுக்கள் 13236 மற்றும் 13099/2024 மீதான (20.06.2024) தேதிய பொதுவான உத்தரவின்படி, நான்கு நாட்டார்களில் உஞ்ஜனை மற்றும் செம்பொன்மாரி நாட்டார்கள் தரப்பில் அவர்களுக்கான மரியாதையினை பெற்றுக்கொண்டனர். தென்னிலை மற்றும் இறகுசேரி நாட்டார்கள் சார்பில் சிவகங்கை தேவஸ்தானம் மரியாதையினை பெற்றுக்கொண்டனர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்  திருவாரூர் தேர் திருவிழா நடைபெறுவதற்கு வழிவகுத்தார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் கண்டதேவி கிராமத்தில் அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர்  திருக்கோயில் தேரோட்ட திருவிழா மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தேவஸ்தானம், பொதுமக்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது  என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும், அருள்மிகு ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர்  திருக்கோயில் தேரோட்ட திருவிழா இதேபோன்று, மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்




திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

அலுவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

Next Post

பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

admin2

admin2

Next Post
பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.