மதுரை: மதுரை மாநகரம் என்றாலே அன்னை மீனாட்சி அரசாளுகின்ற நகரம் என்ற தனித்த பெருமை பெற்றது. பெண்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு இணையான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற களத்தில் நின்று வென்று தங்களை நிரூபித்துக் கொண்ட பெண் ஆளுமைகள் பலர் தமிழ்நாட்டில் முக்கிய அரசு பதவிகளில் பொறுப்பு வகித்து தனித்த முத்திரையை பதித்து வருகின்றனர் அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா ஐஏஎஸ், மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனராக மோனிகா ராணா, ஐஏஎஸ் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளராக இந்துமதி, வருவாய் கோட்டாட்சியர்களாக ஷாலினி, ஜெயந்தி, வருவாய் வட்டாட்சியர்களாக மீனாட்சி, செந்தாமரை , மாநகராட்சி நகர் நல அலுவலராக இந்திரா, முதன்மை கல்வி அலுவலராக ரேணுகா, காவல்துறை துணை ஆணையராக அனிதா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக சித்ரா, கள்ளழகர் திருக்கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா என பெண்களே அனைத்து முக்கிய பொறுப்புகள் வகித்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளராக சித்ரா விஜயன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். அவரின் ஆளுமைக்கு கீழ் சவால்கள் நிறைந்த மதுரை மாநகராட்சி பல புதிய நிலைகளை அடைய வாழ்த்துவோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி