சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவி தனிஷா நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் இரண்டாம் இடமும் சிவகங்கை மாவட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் தமிழ் 99 ஆங்கிலம் 99 கணிதம் 100 அறிவியல் 100 சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 498 முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே போல் பள்ளியைச் சேர்ந்த ஜோ ஜெனோலின், 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் மதிப்பெண்களும், செல்வி 496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளையும் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியையும் பள்ளியின் தாளாளர்சேதுராமன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவிகளை வாழ்த்துக்களை கூறி பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி