திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மூன்றாவது பரிசை அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பலராமன் 5 அடி உயரமுள்ள பரிசு கோப்பை மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணம் வழங்கி சிறப்பித்தார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத், தமிழ்ச்செல்வன், திருமலை, செல்வகுமார், கடப்பாக்கம் ராஜா, வைரவன் குப்பம் ஞானமூர்த்தி மற்றும் அரங்கம் குப்பம் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு