திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வைரவன் குப்பம் கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் கிராம மக்கள் சார்பில் மின்சாரம் குறித்தும் சாலை குறித்தும் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி நம்பிக்கை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பழவை முகம்மது அலவி, கன்னிமுத்து, எம்.கே. தமின்சா, காசி, ஷேக்தாவித் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பழவை ஜெயசீலன், ஆண்டிக்குப்பம், சஞ்சய் காந்தி, வைரவன் குப்பம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு