திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை, பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது. மே 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் சோழவரம் உள்வட்டத்தில் அடங்கிய நல்லூர், ஜெகநாதபுரம், ஆத்தூர், எருமை வெட்டிபாளையம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு, ஆட்டந் தாங்கல், விஜயநகர் உள்ளிட்ட கிராமங்களும் அதனை தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் ஜமாபந்தியானது ஜூன் மாதம் திங்கள் பத்தாம் தேதி செவ்வாய்க்கிழமை உடன் முடிவடைகிறது. பொன்னேரி வட்டத்தில் உள்ள 13 உள்வட்டத்தில் அடங்கிய 200 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் பட்டா மற்றும் இதர குறைகள் சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
முதல் நாள் தொடங்கிய ஜமாபந்தியில் வருவாய் தீர்வாய அலுவலர் பொன்னேரி மற்றும் திருவள்ளூர் உதவி ஆணையர்களால் கணேஷ் ஜமாபந்தியை துவக்கி வைத்தார். ஜமாபந்தி நாளில் பாரம்பரியமாக நடைபெறும் நேர்கோண கட்டை மூலம் பார்வையிடுதல் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்,பேரிடர் மேலாண்மை பிரிவு வட்டாட்சியர் மதன், கலால் வட்டாட்சியர் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், துணை வட்டாட்சியர் பாரதி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு