திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ் ஊராட்சி அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் லைட் ஹவுஸ் கொடிமரம் அருகே நடைபெற்றது . அரங்கங்குப்பம், கூனங்குப்பம், செம்பாசி பள்ளி குப்பம், வைரவன் குப்பம், கரிமணல், நக்கதுறவு, பேட்டை, பள்ளி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிருணியம் பலராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் வைரவன் குப்பம் கிராமத்தில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று விபத்தில் இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5000 ரூபாய் வழங்கிய மாவட்ட செயலாளர் பலராமன் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக மீஞ்சூர் ஒன்றிய கழகச் செயலாளர் நாலூர் முத்துக்குமார், செல்வகுமார், இ.ஆர்.தமிழ்ச்செல்வன், திருமலை, மீஞ்சூர் மாரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் எஸ்.பி.அருள், லாரன்ஸ், பூபாஷா, வைரவன் குப்பம் ஞான மூர்த்தி, தேசராஜ், ரவி, குப்பன், சங்கர், ஜெகன், ஞானவேல், சுப்பிரமணி, சந்திரன், சின்னன்னா, பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு