சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, உதவி ஆணையர் ஆயம் ரங்கநாதன் தலைமையில் தாசில்தார் மாணிக்கவாசகம் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி வருவாய் தீர்வாய அலுவலரும் உதவி ஆணையர் ஆயம் இரா.ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
திருக்கோஷ்டியூர் உள்வட்டத்திற்கு நடைபெற்றதில் 37 மனுக்கள் பெறப்பட்டு 5 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா, 2 மாற்றுதிறனாளி உதவி தொகை, 1 திருமணமாகாத பெண் ஓய்வூதியம் மற்றும் இரண்டு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் இரா.மாணிக்கவாசகம், தனி வட்டாட்சியர்கள். மு.கண்ணன், இரா.மங்கையற்திலகம், மற்றும் துணை வட்டாட்சியர்கள் மாரியப்பன், சந்திரபோஸ் உடனிருந்தனர். (27.05.2025) இளையாத்தங்குடி, (28.05.2025) நாச்சியாபுரம், (29.05.2025) நெற்குப்பை மற்றும் (30.05.2025) திருப்பத்தூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெறும். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்கான மனுவினை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி