திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம், மாரியம்மன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மே மாதம் 29ஆம் தேதி மஞ்சள் இடித்தல் பரதநாட்டியத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியானது தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று நிகழ்ச்சியின் முக்கிய தினமான இன்று விநாயகருக்கு கலச அர்ச்சனை, கோ பூஜை, மகாபூர்னாதி நடைபெற்று கும்பம் புறப்பாடு எனும் யாத்ராதானம் நடைபெற்று கலச கோபுரத்திற்கு புனித நீராட்டலான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் எனும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆலய உபயதாரர்களான அச்சுதன் நாயர்-சரஸ்வதி, நாராயணன்-திவ்யா கிருஷ்ணன் ஆகியோர் உபயத்துடன் ஸ்ரீமான் சதிஷன் பட்டாச்சாரியார் ஸ்ரீ மான் நரசிம்ம சிவாச்சாரியார், ஸ்ரீ மான் பிரமோகன் ஆகியோர் நடத்தி வைத்த கும்பாபிஷேக நிகழ்ச்சியினை கோவில் நிர்வாகிகள் முருகேசன், சந்திரசேகர், ஜெயமதன் மற்றும் மாரியம்மன் நகர் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக நந்தியம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் கலந்து கொண்டார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு