மதுரை : மதுரை மாநகராட்சி மற்றும் சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லூரி இணைந்து ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல் மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் (11.06.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
மாண்புமிகு மேயர், ஆணையாளர் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ. மாணவிகள் புத்தாக்கம் பெறுவதற்கு மாநகராட்சியின் சார்பில் விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவில் மற்றும் மாநில நடைபெறும் பல்வேறு குறு விளையாட்டு போட்டிகள், உயர்கல்வி வழிகாட்டுதல், மேஜிக் ஷோ மற்றும் பசுமை நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலனை காக்கும் பொருட்டு மதுரை மாநகராட்சி மற்றும் சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லூரி இணைந்து மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ”புன்னகையின் பாதை” திட்டம் ஆகும். இத்திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சுமார் 18000 மாணவ, மாணவியர்களுக்கு இலவச வாய்வழி பல் மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் 11.06.2025 முதல் 23.12.2025 வரை ஆறு மாத காலத்திற்கு வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டும் பள்ளியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஈ.வெ.ரா நாகம்மையார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பல் பரிசோதனை சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் தொடங்கி வைக்கப்பட்டு மாணவியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் நோய்களுக்கான வாய்வழி பரிசோதனை ஆரோக்கியமான புன்னகை மற்றும் மகிழ்ச்சியான புன்னகை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைகான வாய்வழி சுகாதாரக் கல்வி ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும். இம்முகாமில் மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனை செய்து கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் இம்முகாமில் பல் மருத்துவ சிகிச்சை தொடர்பான மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட குறும்படம் திரையிடப்படுகிறது.
தொடர்ந்து மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் என மொத்தம் 49 பள்ளிகளில் கால அட்டவணைபடி மாணவ, மாணவியர்களுக்கான பல் மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத் தலைவர் திருமதி.பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் திரு.ரவிச்சந்திரன், துணை ஆணையாளர் திரு.ஜெய்னுலாபுதீன். கல்வி அலுவலர் திரு.ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.நூர்ஜஹான், சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர். கே.தன்வீர், சமூக நல பல் மருத்துவ பிரிவு துறைத் தலைவர் மரு.திவ்யா, உதவி விரிவுரையாளர் மரு.லாவண்யா ராகவி, மற்றும் பயிற்சி மருத்துவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி