மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய உபகரணங்களை, பள்ளியின்தலைமை ஆசிரியை சகாய சாந்தி ராணி, முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வக்கீல் சோதி வேலாயுதம் வழங்கினார்.
சமூக ஆர்வலர் தங்கவேல் இனியான், 120 மாணவ மாணவிகளுக்கு மூன்றாவது ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இதில், நாட்டாமை சுந்தராஜு, வக்கில் சிதம்பரம், காயம்பு
பள்ளி ஆசிரியர்கள் வேலாயுத மூர்த்தி சுகன்யா தேவி கவிதா தனலட்சுமி ராஜலட்சுமி செபஸ்தியார்ன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி