திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் பவுன்ஸ் அண்ட் குரூஸ் டான்ஸ் அகாடமி சார்பில் அதன் இயக்குனர் அருள் தலைமையில் உடல் நலம் மற்றும் மனநலத்தை பேணிக்காக்கும் விதத்திலும், அதீத செல் ஃபோன் பயன்பாடு, போதைப் பழக்கங்களில் இளம் தலைமுறை ஈடுபடாமல் இருப்பதற்கும், பெற்றோர் மற்றும் குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் பொருட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால முகாம் மே மாதம் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கான நிறைவு விழா மீஞ்சூரில் உள்ள சகாய மாதா சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி, ஆன்மீகச் செம்மல் மீஞ்சூர் டாக்டர். விஜயராவ், ஓய்வு பெற்ற பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் கங்காதர ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சி இணை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் பெரவள்ளூர் டாக்டர்.சே.ராஜா,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.டி.பானுபிரசாத், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும்,த மிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவருமான டாக்டர் காத்தவராயன், ஆங்காடு ஸ்ரீ கிரிஷ் இண்டர்நேஷனல் பள்ளி தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர்.ஜெய கார்த்திக், கல்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, மீஞ்சூர் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் மாஸ்டர் சார்லஸ், அக்னி சிறகுகள் சமூகநல அறக்கட்டளை இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற நடன கலைஞர்கள், நடன இயக்குனர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து 5 மணி நேரம் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு