திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு கல்விச்சீர் விழா நடைபெற்றது. இதில் 200 கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பொன்னேரி சுற்று வட்டாரத்தில் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கற்கை நின்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு (2025), அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி பேக் உடன் தலா ஒரு வருடத்திற்கான அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் வசூல் செய்யும் கல்வி கட்டணம் கல்விச்சீராக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் திரு.செந்தில்நாதன் மாணவ மாணவிகளுக்கு கல்விச்சீர் வழங்கியதுடன்
பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை மூலம் மாலை வகுப்பு பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி டில்லி குமாரி அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 454 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற மைக்கு ரூபாய் 56 ஆயிரம் மேற்படிப்பிற்காக வழங்க வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மாணவி மதுமிதாவிற்கு பத்தாயிரம் ரூபாயும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று சென்னை மற்றும் பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் வடிவேல், கார்த்திக், நவீன் குமார் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். பள்ளி மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு