• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள், வழங்கிய அமைச்சர்!

admin by admin
November 4, 2022
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை :  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 216 மாணாக்கர்களுக்கு ரூ.10,95,840 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியும் ,மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர், மாணாக்கர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்கள். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. தற்போதைய ,நவீன காலத்திற்கேற்ப பாடத்திட்டங்களை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அறிவுப்போட்டியை ஈடு செய்கின்ற வகையில் மாணாக்கர்கள் அறிவுக்கூர்மையுடன் பயில வேண்டிய சூழ்நிலை உள்ளது. எதிர்கால தலைமுறையினர் ஆக்கபூர்வம் நிறைந்தவர்களாக உருவாக்குவதற்கான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் , செயல்படுத்தி, கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.

தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய கல்வியை நல்லமுறையில் கற்று தங்களது வாழ்வினை வளமானதாக உருவெடுப்பதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் தற்போது நிறைவான அடிப்படை வசதியினை பெற்றுள்ளீர்கள். உங்களது பெற்றோர்களின் பொருளாதார சுமையையும் குறைத்து, பெற்றோர்களின் நிலையிலிருந்து உங்களுக்கு தேவையான அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். பெற்றோர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவுத்திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். நீங்கள் பள்ளிக்கல்வி, உயர்கல்வி கற்பதற்கு மட்டுமின்றி பட்ட மேற்படிப்பு பயில்வதற்கும் அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணாக்கர்கள் நல்லமுறையில் பயின்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 38 மாணவர்கள் மற்றும் 58 மாணவியர்களுக்கும், கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 மாணவர்கள் மற்றும் 18 மாணவியர்களுக்கும், முசுண்டபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 மாணவர்கள் மற்றும் 44 மாணவியர்களுக்கும் என 3 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 96 மாணவர்களுக்கு தலா ரூ.5,175வீதம் ரூ.4,96,800 மதிப்பீட்டிலும், மொத்தம் 120 மாணவியர்களுக்கு தலா ரூ.4,992 வீதம் ரூ.5,99,040 மதிப்பீட்டிலும் என மொத்தம் 216 மாணாக்கர்களுக்கு ரூ.10,95,840 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட 3 அரசுப்பள்ளியில் 2021-2022-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையாக முதல் பரிசுத்தொகை ரூ.5,000இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3,000மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2,000 ஆகியவைகளையும் மற்றும் புரவலர் திட்டத்தின் கீழ் மேற்கண்ட 3 பள்ளிகளின் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், தலா ரூ.10,000 வீதம் பங்களிப்புத் தொகையினையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

மேலும், சிங்கம்புணரி வட்டம், கட்டுக்குடிப்பட்டி கிராமத்தில், தற்போது செயல்பட்டு வரும் முழுநேர நியாயவிலைக் கடையில் மொத்தம் 980 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில், மின்னமலைப்பட்டி கிராமத்தில் 195 குடும்ப அட்டைகள் உள்ளன. கட்டுக்குடிப்பட்டியிலிருந்து மின்னமலைப்பட்டி 2.5 கி.மீட்டர் தூரம் உள்ளதால்,
மின்னமலைப்பட்டி பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், அப்பகுதியைச் சேர்ந்த தனியார் இடத்தில் தற்சமயம் தற்காலிக நியாய விலைக்கடை இன்றையதினம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், திறந்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மின்னமலைபட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், நிரந்தரக் கட்டிடம் கட்டித்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

கல்லங்காளபட்டி ஊராட்சியில் 180 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனுள்ள வகையில், பகுதிநேர நியாய விலைக்கடையினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திறந்து வைத்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 29 நபர்களுக்கு ரூ.10,72,326 மதிப்பீட்டிலும், நாகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 17 நபர்களுக்கு ரூ.6,29,500 மதிப்பீட்டிலும், தர்மபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 22 நபர்களுக்கு ரூ.8,26,00 மதிப்பீட்டிலும், வலசைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 9 நபர்களுக்கு ரூ.2,38,020 மதிப்பீட்டிலும், கரிசல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 8 நபர்களுக்கு ரூ.2,22,179 மதிப்பீட்டிலும் மற்றும் உலகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 7 நபர்களுக்கு ரூ.3,92,628 மதிப்பீட்டிலும் என மொத்தம் 92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.33,80,653 மதிப்பீட்டிலான பயிர்க்கடனுதவி, தென்னை பராமரிப்பு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாற்றுத்திறனாளி கடனுதவி ஆகியவைகளையும் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், 40 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கோ.ஜீனு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.சுவாமிநாதன்,  அலுவலர் சி.ரெத்தினவேல், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Sivagangai
Previous Post

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Next Post

மக்கள் தொடர்பு முகாம், ஆட்சியர் அறிவிப்பு!

admin

admin

Next Post

மக்கள் தொடர்பு முகாம், ஆட்சியர் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.