சிவகங்கை : சிவகங்கை ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஜோனாவிஜயகுமாரி அவர்கள் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராமதாஸ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி