• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home

கால்நடைப் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

admin by admin
January 11, 2024
in Latest News
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட செட்டிநாடு கால்நடைப்பண்ணையின் செயல்பாடுகள் குறித்து, (11.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிநாடு ஊராட்சியில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், மொத்தம் 1,907.32 ஏக்கர் பரப்பளவில் கால்நடைப் பண்ணை இயங்கி வருகிறது. இதில், 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான பராமரிக்கப்பட்டு வரும் கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் பல்வேறு வகையான 464 மாடுகள் வளர்க்கப்படும் கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம் மற்றும் பல்வேறு வகையான 269 ஆடுகள் வளர்க்கப்படும் ஆட்டுக்கொட்டகைகள், மற்றும் சுமார் 781 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படும் கோழிக் கொட்டகைகள் ஆகியவைகள் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், இப்பண்ணையில் ஆடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆடுகளில் இராமநாதபுரம் வெள்ளை இன செம்மறி ஆடுகள் மற்றும் தலைச்சேரி, ஜமுனாபாரி இன வெள்ளாடுகள், ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிடவும், அதேபோன்று, மாட்டினப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் மாடுகளில் 425 தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பண்ணையில் விவசாயப் பிரிவில் 40 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோ-4 தீவனப்புல், 150 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரத்தீவனப்புல், 15 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற நாற்றுச்சோளம் ஆகிவற்றை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிடவும், இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஊறுகாய்ப்புல் தீவனக் கட்டுக்கள், அனைத்து கருவிகளையும் செயல்படும் நிலையில் பராமரித்து, உற்பத்தியை மேலும் பெருக்கிடவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2021-22 ஆண்டு செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின் கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பசுந்தீவன உற்பத்தியினை மேம்படுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளின் எண்ணிக்கை, பால் உற்பத்தி ஆகியவைகளை பெருக்கி, தற்போது செயல்பட்டு வரும் செயல்பாடுகளை விட, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் கூடுதல் சிறப்புடன் இப்பண்ணை செயல்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த ஆய்வுகளின் போது தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) மரு.இரா.கார்த்திகேயன் மற்றும் செட்டிநாடு கால்நடைப்பண்ணை துணை இயக்குநர் மரு.வே.சு.ராகவன், பேரூராட்சி தலைவர்கள் திருமதி ராதிகா (கானாடுகாத்தான்), திருமதி சங்கீதா (கண்டனூர்), திரு.சேங்கைமாறன் (திருப்புவனம்), ருத்மா சரவணன் அவர்கள் மற்றும் மானாமதுரை நகர்மன்றத்தலைவர் திரு.மாரியப்பன் கென்னடி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.கே.எஸ்.எம்.மணிமுத்து, கால்நடை உதவி மருத்துவர்கள், விவசாய மேலாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivagngai
Previous Post

பொங்கல் பரிசு வழங்கிய நகர்மன்றத் தலைவர்

Next Post

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணி

admin

admin

Next Post

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.