• About
  • Contact
Friday, May 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

ஊக்கத் தொகை வழங்கும் விழா

admin2 by admin2
October 24, 2024
in Latest News, Sivaganga
0
ஊக்கத் தொகை வழங்கும் விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில், 409 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 143 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் என, மொத்தம் 552 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த மொத்தம் 11,600 உறுப்பினர்களுக்கு ரூ.02.52 கோடி மதிப்பீட்டிலான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் , திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், வழங்கி தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர், விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி, விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அடிப்படையாக திகழ்ந்து வரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையிலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீட்டு திட்டம், பராமரிப்பு கடனுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கெனவும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பயனுள்ள வகையிலும், அதற்கான சிறப்பு அறிவிப்புகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அறிவித்து வருகிறார்கள்.பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, பால் பெறப்பட்டு, பொதுமக்களாகிய நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில், தனியார் நிறுவனங்களை விட குறைவான விலையில், தரமானதாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஒரு லிட்டருக்கு உச்சகட்ட விலையை அரசால் நிர்ணயம் செய்யப்பட்டும், அதே சமயம் லாபம் கிடைப்பதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களை தவிர்ப்பதற்கும், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, அவர்களுக்கான சமமான அரசாக தமிழக அரசு சிறப்பாக திகழ்ந்து வருகிறது. பால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் கிராமப்புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அவை அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.01.00 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பண்டிகை காலங்களில் அவர்களுக்கு பயனுள்ளதாக இவை அமைகிறது.சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த (01.01.1983) ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை எல்லையாக கொண்டு உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 409 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 8,912 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக 2,01,03,857.10 லிட்டருக்கு தலா ரூ.01.00 வீதம் ரூ.2,01,03,857.10/- மதிப்பீட்டிலும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 143 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 2,688 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக 50,71,825.30 லிட்டருக்கு தலா ரூ.01.00 வீதம் ரூ. 50,71,825.30/- மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 552 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த மொத்தம் 11,600 உறுப்பினர்களுக்கு லிட்டர் ஒன்றிற்கு ரூ.01.00 வீதம் ரூ.2,51,75,682.40 மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


வருகின்ற தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசின் குறிப்பிட்ட துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கான ஊக்கத்தொகையும் அரசின் சார்பில்
வழங்கப்படுகிறது. மேலும், தற்போது திருப்புவனம் பகுதியில் இயங்கி வரும் பால் கூட்டுறவு சங்கங்களை போல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதில், திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்களும் முன்னுதாரணமாக திகழ்ந்திடும் வகையில், தங்களது பங்களிப்பினை அளித்திடல் வேண்டும்.
பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பயனுள்ள வகையில், சட்டமன்ற பேரவை அறிவிப்பின் படி, காரைக்குடி மண்டலத்தில் உள்ள பால் பதப்படுத்திடும் நிலையத்தில் 01 இலட்சம் லிட்டர் பதப்படுத்துவதற்கு ஏதுவாக, ரூ.20.00 கோடி மதிப்பீட்டிலான இயந்திரமும் வர
உள்ளது.


இது போன்று அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) யு.வி.ராஜசேகர், துணைப்பதிவாளர் (பால்வளம்) (மானாமதுரை)ம.ஜெரினா பானு மற்றும் பால்வளத்துறை,
ஆவின் துறை சார்ந்த அலுவலர்கள், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்
உட்பட பலர்கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Sivaganga
Previous Post

மிதிவண்டி வழங்கும் விழா

Next Post

அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம்

admin2

admin2

Next Post
அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம்

அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

May 8, 2025
பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

May 8, 2025
முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

May 7, 2025
விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

May 7, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.