மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் , மோர் , சர்பத், இளநீர், தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி, போன்ற கோடை கால குளிர்பானங்கள் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல.ஏ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ்.கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் வார்டு கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி முத்துச்செல்வி சதீஷ் ஈஸ்வரி ஸ்டாலின் சிவா செல்வராணி பிற்பட்டோர் நல வாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் கேபிள் ராஜாமாணவரணி எஸ்.ஆர் சரவணன் வார்டு பிரதிநிதி சங்கங்கோட்டை சந்திரன் ரவி ராமநாதன் கண்ணதாசன் பொருளாளர் எஸ் எம் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி