மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ,
மாவட்ட கழகச் செயலாளர் விஷால் கிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தாமு, இளைஞரணி மாவட்டச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் பசுமணியன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ,
ஒன்றியச் செயலாளர் உசிலை ராஜேஷ் கண்ணன், பரமன், தென்கரை மோகன், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் சுரேஷ் நன்றி
கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி