• About
  • Contact
Monday, June 2, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home state

சுதந்திரப் போராட்ட வீரர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

admin by admin
June 12, 2023
in Latest News, Sivaganga
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர் “வாளுக்கு வேலி அம்பலம்” அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில், அன்னாரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம். கத்தப்பட்டு கிராமத்தில், அன்னாரது திருவுருவச்சிலைக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜீத்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்கள், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், முதல்வர்களுக்கெல்லாம் தலைசிறந்த முதல்வராக திகழ்ந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வரலாற்று சிறப்பு மிக்கவர்களின் புகழை வெளிக்கொணருகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை தமிழக அரசின் சார்பில் மெற்கொண்டு வருகிறார்கள்.

வெள்ளையனே வெளியேறு என்று முதல் குரல் கொடுத்த பெருமை சிவகங்கை மண்ணைச் சார்ந்தததாகும். வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாட்டத்தில், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள், மருதுசகோதரர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்த இப்பூமியில், சுதந்திரப் போராட்ட வீரரான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களை போற்றிடும் வகையிலும், அவர்களின் வாரிசுதாரர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் அனைவரது பெரும் முயற்சியாலும், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாளான இன்று அரசு விழா கொண்டாடிட அரசால் உத்தரவிடப்பட்டு, இந்தாண்டு முதல் ஜூன் 10-ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் அரசு விழா கொண்டாடப்படவுள்ளது. முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில், தென்பாண்டி சிங்கம் என்ற நூலினையும் எழுதி, அன்னார் அவர்களின் புகழை வெளிக்கொணரும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அதன்படி, அவ்வழியில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வரலாற்று சிறப்பு மிக்கவர்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினர் முன்மாதிரியாக அவர்களை எடுத்துக் கொள்கின்ற வகையிலும், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மட்டுமன்றி, அவர்கள் சொல்லாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், வீரம், தியாகம் ஆகியவைகளில் சிறந்து விளங்கிய வீரம் விளைந்த சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிற்நத நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து, சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், அரசின் சார்பில் அன்னார் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைப்பதற்கும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், நாம் இன்றையதினம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணமாக உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் பொருட்டும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், 200 ஆண்டுகளுக்கு முன்னதாக, நடந்துள்ள உண்மைச் சம்பவத்தை வெளிக்கொணருகின்ற வகையில், சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பையும், தியாகத்தையும் முழுiமாக அளித்த சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையிலும், அதற்கு மெருக்கூட்டும் பொருட்டும், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள், தன் பொன்மொழிகளால் வரலாற்று சிறப்புக்களை நூல்களாக பொறித்துள்ளார். அன்றைக்கு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் விதைத்த விதையின் பயனாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழிற்கு வலுச்சேர்க்கின்ற வகையில், அன்னாரது பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடிட உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கான பெரும் முயற்சியில், பலரின் பங்களிப்புடன் இணைந்து, நானும் பங்கு பெற்று, அதன் முழுப்பயனையும் இன்றையதினம் அடைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இதற்கான சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும், சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கென பாடுபட்டவர்களை கௌரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலைகள் ஆகியவைகளை அமைத்து, எதிர்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு, தலைசிறந்த முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழந்து வருகிறார்கள் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், சிவகங்கை சீமை பாரம்பரியமிக்க வரலாற்று சிறப்பு அம்சங்கள் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. வீரமும், வேகமும் நிறைந்த இம்மண்ணிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் அரசு விழா இன்றையதினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்து, நத்தம் கணவாய் போராட்டத்தில் பங்கு பெற்று, இம்மண்ணிற்கு பெருமை சேர்த்த வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை போற்றிடும் வகையிலும், பறைசாற்றுகின்ற வகையிலும், அவர்களது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புக்களை வெளிக்கொணரும் வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் மற்றும் மருதுசகோதரர்கள் ஆகியோர்களின் வரிசையில் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பெருமையையும் இளைய தலைமுறையினர்கள் அறிந்து கொள்வதற்கு அடிப்படையாக இவ்விழா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்பு அம்சங்களை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்ற அரசாக, முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் வழியில் சிறப்பாக ஆட்சியினை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.

இன்றையதினம் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் அரசு விழா, இனிவரும் காலங்களில், ஒவ்வொரு வருடமும் ஜூன் 10-ஆம் தேதியன்று, அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடப்படும் வகையில், அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களை, எதிர்கால சந்;ததியினர்கள் முன்மாதிரியாக கருத்தில் கொண்டு, நாட்டிற்கான தங்களது அர்ப்பணிப்புக்களை, முழு ஈடுபாடுடன் அளித்து, செயல்பட வேண்டும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் திரு.தென்னவன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திருமதி கு.சுகிதா, சிவகங்கை வட்டாட்சியர் திரு.பாலகுரு, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் திரு.சேங்கைமாறன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் திரு.முத்துத்துரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.மணிமுத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், வழக்கறிஞர் சிவ.கலைமணி அம்பலம், வாரிசுதாரர்கள் திரு.கே.செல்வராஜ், திரு.கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivagangai
Previous Post

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மேயர்

Next Post

தமிழ்ச் சங்கம் சார்பாக கலைஞர் தமிழ் என்ற உயர் விருது

admin

admin

Next Post

தமிழ்ச் சங்கம் சார்பாக கலைஞர் தமிழ் என்ற உயர் விருது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025
அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

May 28, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.