• About
  • Contact
Monday, June 9, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Collector News

வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு கேடயம் பாராட்டுச் சான்றிதழ்

admin by admin
June 17, 2023
in Collector News, Latest News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையினை, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆஷா அஜீத்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.மாங்குடி அவர்கள் (காரைக்குடி), திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் (மானாமதுரை) ஆகியோர் முன்னிலையில், இன்று (16.06.2023) கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மானாகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வழங்கி தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, விளையாட்டுத் துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில், தமிழக அரசு திறமைமிக்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணையர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தக்க பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து, அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஏதுவாக, பல்வேறு ஊக்கத் தொகையினை வழங்கி, அவர்களை ஊக்குவித்து வருகிறது. மேலும், தமிழக அரசு தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணையர்களை ஊக்கப்படுத்திடவும் பல்வேறு போட்டிகளை நடத்தி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் விளையாடுப் போட்டிகளில் பங்கு பெறுவதால், உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், புத்துணர்ச்சியுடனும் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. மாணவ, மாணவியர்கள் கல்வியுடன் கூடிய விளையாட்டின் மூலமே ஒரே சிந்தனையான மனநிலையை ஒருங்கிணைத்து வாழ்வில் வெற்றி பெற முடியும்.
மாணவ, மாணவியர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்று, உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினை பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், கடந்த (07.02.2023) அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் சிறப்பாக தொடங்கப்பட்டது. இப்போட்டியானது பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. இப்போட்டிக்கென, மாவட்டத்தில் மொத்தம் 13,739 விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் பெறப்பட்டது. அதில் ஆண்கள் பிரிவில் 4,000 விளையாட்டு வீரர்களும், பெண்கள் பிரிவில் 3,500 வீராங்கணையர்களும் கலந்து கொண்டனர். இதில் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று, வெற்;றி பெற்றுள்ள 950 விளையாட்டு வீரர்கள் மற்றும் 688 வீராங்கணையர்கள் என மொத்தம் 1,638 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களுக்கு இன்றையதினம் பரிசு, சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக முதல் பரிசிற்கு ரூ3,000/-மும், இரண்டாம் பரிசிற்கு ரூ.2,000/-மும் மற்றும் மூன்றாம் பரிசிற்கு ரூ.1,000/-மும் வழங்கப்படவுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டத்தில் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்கள, தொடர்ந்து மண்டல அளவிலான போட்டியில் பங்கு பெறுவதறகான வாய்ப்பினை பெறுவார்கள். அதில், முதல் இடத்தைப் பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களுக்கு சீருடைகள், போக்குவரத்து பயணப்படி, தங்கும் இடம், உணவு மற்றும் மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கிடுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாநில போட்டியில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கணையர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ,75,000/-மும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ50,000/-மும் வழங்கப்படவுள்ளது. இதுதவிர குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ,50,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.37,500/-மும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.25,000/-மும் வழங்கப்படவுள்ளது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் தங்களது வெற்றியை இதோடு நிறைவு செய்யாமல், தொடர்ந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகளில் சிறந்த இடங்களை பெற்று, சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த வீரர் மற்றும் வீராங்கணையர்கள் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோன்று, இனிவரும் காலங்களிலும் சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பது ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களின் முக்கிய பங்காகும். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு கட்டணமில்லா மேற்படிப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகின்ற விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வாய்ப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை போன்ற சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை, மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு, படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டிலும் சிறந்து விளங்கி, தங்களது உடல் மற்றும் மனம் ஆகியவைகளை சீராக வைத்துக் கொண்டு, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சி.ரமேஷ்கண்ணன், மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவர் திரு.சுப.குமரேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திருமதி அ.சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திரு. ம.நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி மஞ்சரி லெட்சுமணன், தளக்காவூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.அ.ஆரோக்கியசாமி, மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் திரு.கே.அருண்குமார் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivagangai
Previous Post

விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த சட்டமன்ற உறுப்பினர்

Next Post

நியாய விலை கடையை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

admin

admin

Next Post

நியாய விலை கடையை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

June 9, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

June 8, 2025
குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.