• About
  • Contact
Monday, June 2, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home

1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு

admin by admin
July 12, 2023
in Latest News, Sivaganga
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் தனியார் பங்களிப்புடன் (மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை) ரூ1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தினை (09.07.2023) சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திறந்து வைத்து தெரிவிக்கையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தினை கல்வி வளம் மிகுந்த மாநிலமாக உருவெடுக்கும் பொருட்டு, சிறந்த திட்டங்களை கல்வித்துறையில் செயல்படுத்தி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி என தனித்தனியாக அதிகளவில் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கல்வித்துறையை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும், பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திடும் வகையில் மாணாக்கர்களுக்கு கற்றலுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கி வருவது மட்டுமன்றி, ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறைக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், வகுப்பறையில் தேவையான பொருட்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி, மாணாக்கர்களுக்கு கல்வி கற்கின்ற ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வாறு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் உறுதுணையாக இருந்து, அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர். அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கென அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மற்றும் கொடையாளர்களும், பொதுமக்களின் பங்களிப்புடனும் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மருத்துவ சேவையினை தங்களது தலையாய கடமையாக கொண்டு, பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வரும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனத்தினர் சார்பில், அந்நிறுவனத்தின் நிறுவனர் மரு.சேதுராமன் அவர்கள் பிறந்த இந்த வாராப்பூர் ஊராட்சியில் தான் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை மேம்படுத்தும் விதமாக புதிய பள்ளிக் கட்டிடத்துடன் நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி இவ்வூராட்சிக்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளார். தனது அயராது உழைப்பின் வாயிலாக வாழ்க்கையில் உயர்ந்த மரு.சேதுராமன் அவர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையில் அவரது புதல்வன் மரு.குருசங்கர் அவர்கள் சிறப்பான பணியை மேற்கொண்டு தனது தந்தைக்கு பெருமை சேர்த்து, மருத்துவ சேவை மட்டுமன்றி, கல்வி சேவையும் புரிந்து பெருமை சேர்த்துள்ளார். இச்சேவையினை வழங்கிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனத்தினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த பாராட்டுகளை அரசின் சார்பில் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தாங்கள் தற்போது வழங்கியுள்ள இக்கொடை மட்டுமன்றி, மாவட்டத்தி;ன் பல்வேறு பகுதிகளில் இன்னும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கும், இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமெனவும் இத்தருணத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனை மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் மரு.என்.சேதுராமன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் மரு.எஸ்.குருசங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.இரா.சிவராமன்,துணை இயக்குநர் (சட்டம்) தொடக்க கல்வி இயக்ககம் சென்னை இரா.சுவாமிநாதன், வாராப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி மலர்விழிநாகராஜன,; மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியை திருமதி எஸ்.அலமேலுமங்கை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivagangai
Previous Post

பலத்த காற்றுடன் கனமழை ராட்சத மரம் விழுந்து சேதம்

Next Post

முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர்

admin

admin

Next Post

முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025
அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

May 28, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.