திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலகம் ஆங்கிலேயர்கள் கால கட்டிடத்தில் இயங்கி வந்தது. சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பிக்க முடியாமலும், விரிவாக்கம் செய்ய முடியாமல் இடநெருக்கடி காரணமாக பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறையினர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனையடுத்து சுமார் 3.75கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேண்பாக்கம் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், பொன்னேரி நகராட்சி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மொழிப்போர் தியாகி கா.சு.ஜெகதீசன், சுகுமாரன், பொன்னேரி தி.மு.க நகர செயலாளர் ரவிக்குமார் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு தமிழ் உதயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் அரசு துறை அதிகாரிகள் பல ர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
![](https://tamil.goodgovernance.news/wp-content/uploads/2023/10/image.png)
திரு. பாபு