சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் எம்.கே.எம்.காசிம் மஹாலில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜியும், பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமுமான முகமது பாரூக் ஆலிம், சூர்யா வெற்றிகொண்டான் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நலிவுற்ற மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேஷ்டி, சேலை, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கினர். திருப்புத்தூர் பேரூராட்சி துணை சேர்மன் கான்முகமது, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, நகர இளைஞரணி அமைப்பாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான பசீர் அகமது, நகர தொழிலாளர் அணி நவாஸ், பேரூராட்சி கவுன்சிலர் அபுதாஹிர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி.
முன்னாள் அமைச்சர் தென்னவன், ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், நகரச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் என்.எம்.சாக்ளா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் நாராயணன், திருப்புத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, திமுக பிரமுகர் பிளாசா சேகர், மாவட்ட மகளிரணி வலைதள பொறுப்பாளரும், 12 வது கவுன்சிலருமான பிளாசா ராஜேஸ்வரி சேகர், பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிக்கந்தர் பாதுஷா, மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்பாஸ் அலி, நகர மகளிரணி அமைப்பாளரும், 8 வது வார்டு கவுன்சிலருமான ஷமீம், 6 வது வார்டு கவுன்சிலர் சரண்யா ஹரி, 9வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அரிஹரசுதன், மாவட்ட பிரதிநிதி ஷாஜகான், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.புதூர் கண்ணன், ஒன்றிய பிரதிநிதி அப்துல் அஜீஸ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி