திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, மாணவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்களான விலையில்லா நோட், பாடபுத்தகங்களும் பள்ளி சீருடையும் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் அவர்களது கரங்களால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி, வட்டார கல்வி அலுவலர் முகமது அனீஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை மாலினி கோடீஸ்வரன், 13வது வார்டு உறுப்பினர் கவிதா சங்கர் மற்றும் SMC உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு