• About
  • Contact
Thursday, May 22, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:

admin by admin
October 31, 2022
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்இ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீடு, ஜிப்சம், உரம் வழங்குதல், பி.எம்.கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தருதல், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் தொகை சம்பா மிளகாய் நாற்றுக்கள் கத்தரி வெங்காயம் பயிர்சேதம் இழப்பீட்டுத் தொகை வழங்குதல் பவர் டில்லர் வழங்குதல் வரத்துக்கால்வாயில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய கிணற்றிற்கான செயல்படாத மோட்டார் பம்பிற்கு பதிலாக புதிய மோட்டார் பம்ப் வழங்குதல் அரசு மானியத்துடன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் விவசாயப் பணிகளுக்கு ரோட்டவேட்டர் வழங்குதல் கண்மாய் கால்வாய் சீரமைத்து தருதல் கண்மாய் கலுங்கு மறு கட்டுமானம் செய்து தருதல் கண்மாயின் வரத்துக்கால்வாயில் உள்ள முள் செடிகளை அகற்றுதல் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மடைகளின் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைத்தல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தோண்டியுள்ள விவசாய கிணற்றிற்கு மின் இணைப்பு வழங்குதல் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றுதல், புறவழிச்சாலை அமைத்தல், பட்டா ரத்து மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா திருத்தம் மற்றும் மாறுதல் நில அளவை செய்தல், ஊரணியில் தனிநபர் ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல், கருவேல் மரங்களை ஏலமிடுதல், விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுதல், நீர் வழித்தடம் அமைத்தல் பொதுப்பாதைகளை மீட்டுத்தருதல், நெல்மூட்டைகள் மழை மற்றும் வெயிலினால் சேதமடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோருதல், இலவச வண்டல் மண் தார்ச்சாலை அமைத்தல், தெருவிளக்கு பழுது நீக்கம் செய்தல், இணைப்புச்சாலை மெட்டல் சாலை மற்றும் சிறுபாலம் அமைத்தல், நிழற்குடை அமைத்தல், சாலையை செப்பனிடுதல், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றுதல்,
பொது மயானத்திற்கு மின்வசதி அமைத்தல், நியாயவிலைக்கடைக்கு தனிக்கட்டிடம் கட்டுதல், புதிய போர்வெல் டேங்க் மற்றும் பைப்லைன் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய மடைகளில் உள்ள ஆக்கிரப்புக்களை அகற்றுதல், பொதுக்கழிப்பறை வசதி அமைத்தல்,
அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், பனை விதை நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும்,
இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.


இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்:தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை பெற்றிட தேவையான சான்றிதழ்களை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து பணியாற்றிடவும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும் கண்மாய்களில் உள்ள மடைகள் தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீர்செய்திடவும் மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும் வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் செங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.326000 மதிப்பீட்டில் பயிர்க்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொ) ஆர்.தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் கோ.ஜீனு வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), எஸ்.பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Sivagangai
Previous Post

உற்பத்தியாளர் குழுக்களுக்கு 81 இலட்சம் நிதி, மதுரை ஆட்சித்தலைவர்!

Next Post

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

admin

admin

Next Post

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

May 22, 2025
நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

May 21, 2025
அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

May 21, 2025
பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

May 20, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.