• About
  • Contact
Thursday, May 15, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

மதுரை கிரைம்ஸ் 21/11/2022

admin by admin
November 21, 2022
in Other News
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெய்ஹிந்த்புரத்தில்  வாலிபர் கைது!

 

மதுரை :  மதுரை  சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சிவமூர்த்தி (51) இவர் சோலை அழகுபுரம் இரண்டாவது தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை சுப்பிரமணியபுரம் ஹரிசன் காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் உதயகுமார் (21) வழிமறித்து ஆபாசமாக பேசி திருப்புளியால் தாக்கியுள்ளார். இது குறித்து சிவமூர்த்தி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் உதயகுமாரை கைது செய்தனர்.

 

பிச்சைக்காரர் மீது தாக்குதல் ஒருவர் கைது!

 

நரிமேடு அவ்வை தெருவில் ஆட்டோஸ்டேன்ட் அருகே பொன்ராஜ் (75), என்ற முதியவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு சொந்த வீடு இல்லை. இதனால் தொடர்ந்து அங்கேயே இருந்து வந்தார். இதை பி.டி ராஜன் ஐந்தாவது தெருவை சேர்ந்த பாலன் என்ற பாலமுருகன் கண்டித்துள்ளார். அங்கிருந்து வேற இடத்திற்கு செல்லும்படி கூறியுள்ளார். அவர் பேச்சைக் கேட்க பிச்சைக்காரர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலன் பிச்சைக்காரரை ஆபாசமாக பேசி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதியவர் பொன்ராஜ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய பாலனை கைது செய்தனர்.

 

வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது!

 

செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசிமாயன் மனைவி நாக திவ்யா (20) அதே பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் அழகர் என்ற அழகுராஜா (26) இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நாகதிவ்யா வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்த அழகர் அவரை ஆபாசமாக பேசி தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து நாகதிவ்யா செல்லூர் போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

 

விஷம் குடித்த கொத்தனார் சாவு!

 

.கருப்பாயூரணி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் பாண்டி மகன் ஆனந்த் (34), இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் .சம்பவத்தொன்று பாண்டி கோவில் ரிங் ரோட்டில் ஒரு டீக்கடை ஒன்றில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொத்தனார் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் அழகர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை ஆற்றில் அழுகிய நிலையில் ஆண்பிணம் மீட்பு!

 

மதுரை  வைகை ஆற்றில் அழுகிய நிலையில் ஆர்.ஆர் மண்டபம் அருகே ஆண்பினம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என விசாரித்து வந்தனர். விசாரணையில் இறந்தவர் ஆழ்வார் புரம் இசக்கி மகன் துரைப்பாண்டி (35), என்று தெரியவந்தது. இவர் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் காணவில்லை அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இறந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார் .இவரது சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

திருமணம் செய்து கொள்ள மகள் மறுத்ததால்  தாய் தற்கொலை!

 

கோமதிபுரம் வைகை தெரு ஆறாவது தெருவை சேர்ந்தவர் ராஜமினாட்சி (51), இவரது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாய் ராஜமீனாட்சி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ஜெயச்சந்திரன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது!

 

திருப்பரங்குன்றம் மேட்டு தெருவில் மளிகை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த திருப்பரங்குன்றம் பள்ளர் தெருவை சேர்ந்த தங்கபாண்டி 51 என்பவரை போலீசார் கைது செய்து அந்த கடையில் இருந்து 9 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர் சந்திப்பில் பெட்டிக்கடை ஒன்றில் விற்பனை செய்த தனக்கன்குளம் பசும்பொன் நாரை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி மலர் செல்வி 25 என்பவரை கைது செய்து அந்த கடையில் இருந்து பல்வேறு புகையிலை பாக்கெட்டுகள் மொத்தம் 380 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பரங்குன்றம் மேட்டு தெருவில் விற்பனை செய்தமூதாட்டி ராஜாத்தி (65) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஐந்து புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது!

மதுரை நவ21 பொன்மேனியில் பள்ளிக்கூடம் அருகே பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர் .அப்போதுஅங்கு பள்ளிக்கூடம் அருகே பணம் வைத்து சலர் சூதாடிக்கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.பின்னர் அவர்களிடம்விசாரித்தபோது பொன்மேனி மெயின் ரோடு ராகவேந்திரா நகர் பன்னீர்செல்வம் (69),மாடக்குளம் மெயின் ரோடு கோபால் (45),பொன்மேனி அன்னை மீனாட்சி நகர் பிரசன்னா குமார் (48), எல்லீஸ் நகர் சாலைமுத்து நகர் செல்லபாண்டியன் (65) என்று தெரியவந்நது. அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் வைத்து விளையாடிய டேபிள் ஒன்று நான்கு பிளாஸ்டிக் சேர்கள்,, பணம் ரூபாய் (13) ஆயிரத்து (60),மற்றும்சீட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

காரியாபட்டியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

Next Post

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர்!

admin

admin

Next Post

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.